பன்னிபிட்டிய – கலல்கொட பிரதேசத்தில் விபத்து

186

பன்னிபிட்டிய – கலல்கொட பிரதேசத்தில் காரொன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த விபத்து கொட்டாவ – பொரளை பிரதான வீதியில் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து இடம்பெற்ற போது காரை செலுத்திய இராணுவ உத்தியோகத்தர் மது போதையில் இருந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை சந்தேகநபரான இராணுவ உத்தியோகத்தர் தங்கலம பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

SHARE