சிவபூமி  அமைப்பினரால்  நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

872

கிளிநொச்சி, பளை பிரதேச செயலக பிரிவில் இயக்கச்சி பகுதியில்  சிவபூமி  அமைப்பினரால்  நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை ( 12-04-2019 ) பிற்பகல்  நான்கு  மணியளவில்  சிவபூமி நாய்கள் சரணாலயம் வீடற்ற நாய்களின் காப்பகம்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அநாதரவாக தெருக்கள் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படுகின்ற நாய்கள் குறித்த காப்பகத்தில் பராமரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சிவபூமி அமைப்பின் தலைவர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நல்லூர் ஆதீன குரு முதல்வர் , பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பளை பிரதேச செயலாளர் ஜெயராணி, பிரதேச சபை தவிசாளர் சுரேன், வடக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்துள்ளனர்.

SHARE