சமூக வலைத்தளங்களுக்கான தடையை நீக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

186

நாட்டின் சில இடங்களில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கே, ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்தது.

SHARE