கரோலினா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

207

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள  வட கரோலினா பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் இந்த ஆண்டிற்கான கடைசி வகுப்புகள் நடந்து முடிந்தன. வகுப்புகள் முடிந்து வெளியே மாணவர்கள் வரும்போது  திடீரென ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இதனை அறிந்த பல்கலைக்கழகத்தின் அவசர மேலாண்மை அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உடனடியாக ஓடுங்கள், மறைந்துக் கொள்ளுங்கள், பாதுகாப்பாக இருங்கள்’ என பதிவிட்டு அனைத்து மாணவர்களையும் எச்சரித்தது.

இதையடுத்து பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் படுகாயமுற்ற 4 பேரை வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்று அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களுள் 2 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE