தௌஹித் ஜமாத்தின் உறுப்பினரை விடுதலை செய்ய பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்த நபர் கைது

196

தடைசெய்யப்பட்ட தௌஹித் ஜமாத்  சங்கத்தின் உறுப்பினரை விடுதலை செய்ய பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட தௌஹித் ஜமாத்  சங்கத்தின் உறுப்பினரை விடுதலை செய்வதற்காக பொலிஸாருக்கு சுமார் 2கோடியே 50 இலட்சம் வழங்க முன்வந்த சந்தேகநபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்படி, ஹொரோவபொத்தான பொலிஸ் அதிகாரிக்கே மேற்படி பணத்தை இலட்சமாக வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

SHARE