’நீ எத்தனை பேருடன் படுக்கையில் இருந்தாய் என்பது எனக்கு தெரியும்’ – சந்திரிக்காவைத் துாசணத்தால் திட்டிய மகிந்த

420

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தம்மை 19 நிமிடங்கள் துர்வார்த்தைகளினால் திட்டியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
Mahinda-and-chandrika (1)

தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் தாம், அவரை வாழ்த்துவதற்காக தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுத்தாகவும் அதன் போது கடுமையான துர்வார்த்தைகளினால் 19 நிமிடங்கள் தம்மை திட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஏற்கனவே சில ஊடங்களில் தகவல் வெளியிட்ட போதிலும் அவை வெளிப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தம்மை தொடர்ச்சியாக திட்டிக் கொண்டே சென்றதாகவும் இறுதியில் தமக்கு தெரிந்த இரகசியம் ஒன்று பற்றி கூறிய போது அப்படியே தொலைபேசி அழைப்பினை துண்டித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் தொடர்ச்சியாக மஹிந்த தம்மை பழிவாங்கி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வமாக வழங்கப்பட வேண்டிய வீட்டை வழங்க விடாது தடுக்க முயற்சித்தார் எனவும், பாதுகாப்பை வாபஸ் பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு துண்டிக்கப்பட்டமை குறித்து அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு தாம் முறைப்பாடு செய்ததனைத் தொடர்ந்து வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பில் நான்கில் ஒரு பகுதி மீள வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசியல் சாசனத்தின் காரணமாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் தமக்குக் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிராக பாராளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை நிறைவேற்ற தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ஸ சூழ்ச்சித் திட்டம் தீட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

முதலில் 23 பாராளுமன்ற உறுப்பினர்களை திரட்டி வருவதாகத் தெரிவித்த மஹிந்த இறுதியில் ஆறு பேரை மட்டுமே அழைத்து வந்ததாகவும், அதனால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் 75 வீதத்தை தாமே முடித்ததாகவும், இரண்டு அதிவேகப்பாதைகள் மற்றும் தாமரைத் தடாகம் ஆகியனவற்றை தாமே உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை மகிந்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட் பின்னர் பதவிப்பிரமாணம் எடுத்த அடுத்த மணித்தியாலத்தில் சந்திரிக்காவை தொலைபேசியில் தொடா்பு கொண்ட மகிந்த ’நீ லண்டனில் படிக்கும் போதும் உன்ர புருசன் செத்தபின்னரும் ஆடின ஆட்டம் எல்லாம் எனக்கு தெரியும். எத்தனை பேருடன் படுத்தெழும்பியது என்று என்னிடம் பட்டியல் இருக்கின்றது. இப்பவும் உன்ர பாதுகாப்பு அதிகாரிகளுடன் நீ அறைக்குள் கிடப்பதுவும் தெரியும்’ என்று பச்சை பச்சைகாக துாசணவாா்த்தைகளால் அர்ச்சனை செய்ததாக அந் நேரம் சில சிங்கள ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE