ஜனாதிபதி தேர்தலின் போது தபால் மூல வாக்களிப்பிற்கு முதல் நாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேராவினால் முன்வைத்த அறிக்கை அவரை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
மோட்டார் சைக்கிள் பெற்றுக் கொள்ள விரும்பும் கடற்படை அதிகாரிகள் 50,000 ரூபாய் கொடுத்து தங்களுக்கான மோட்டார் சைக்கிள்களை ஒதுக்கிக் கொள்ளலாம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடற்படையினர் 50,000 பணம் செலுத்தியும் அவர்களுக்கான மோட்டார் சைக்கிள் வழங்கப்படவில்லை.
இதேவேளை மோட்டார் சைக்கிள் வழங்குவது குறித்து அரசாங்கம் எவ்வித வாக்குறுதிகளையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.