இஞ்சியை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

320

பழங்காலம் முதல் இஞ்சி ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பலவாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

இஞ்சியை மருத்துவ குணம் கொண்ட தேனுடன் சேர்த்து உட்கொண்டால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் இஞ்சியை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

  • தேனில் ஊற வைத்த இஞ்சி சாப்பிட்டால், வயிற்று உப்புச பிரச்சனை அகலும்.
  • நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க நினைத்தால், தேனில் ஊற வைத்த இஞ்சியை ஒரு துண்டு சாப்பிடுங்கள்.
  • தேனில் ஊற வைத்த இஞ்சியை தினமும் சிறிது சாப்பிடுங்கள். இதனால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.
  • இஞ்சியை தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வரலாம். இது சுவையாக இருப்பதுடன், ஆஸ்துமா பிரச்சனைக்கும் தீர்வளிக்கும்.
  • தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சி துண்டை சாப்பிடுங்கள். இதனால் விரைவில் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • சர்க்கரை நோய் வராமல் இருக்க அப்படியானால் தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுங்கள்.
  • சளி, இருமலால் அவஸ்தைப்பட்டால், தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுங்கள்.
  • அடிக்கடி உங்களுக்கு உடல் வலி ஏற்படுமாயின், அதனைத் தவிர்க்க தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுங்கள்.
  • தேனில் ஊற வைத்த இஞ்சியை தினமும் சிறிது சாப்பிடுங்கள். இதனால் உங்கள் இதயம் எப்போதும் ஆரோக்கியமாக செயல்படும்.
  • நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட நினைத்தால், அவ்வப்போது தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுங்கள்.
  • தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடலாம் அல்லது இஞ்சியை அரைத்து சாறு எடுத்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். இதனால் உங்கள் எடை விரைவில் குறைவதைக் காணலாம்.
SHARE