தித்திப்பு பூரி செய்வது எப்படி

295
குழந்தைகளுக்கு விருப்பமான தித்திப்பு பூரி
தேவையான பொருட்கள் :

மைதா மாவு – 2 கப்
சர்க்கரை – 1 ½ கப்
தேங்காய் துருவல் – 1 கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
கிராம்பு – சிறிதளவு
அரிசி மாவு – 4 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
நெய் – அரை கப்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
தித்திப்பு பூரி

செய்முறை:

வாணலியில் நெய்யை ஊற்றி உருக்கிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை போட்டு அதனுடன் உருக்கிய நெய்யை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பதத்துக்கு வரும்வரை மாவை பிசைந்து ஊற வைக்கவும்.

வாணலியில் சர்க்கரையை கொட்டி போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு பாகு காய்ச்சிக்கொள்ளவும்.
அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

மாவு கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி பூரி போன்று தயார் செய்து கொள்ளவும். அதனை கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

அந்த பூரிகளை சர்க்கரை பாகில் முக்கி பரிமாறலாம்.

இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சர்க்கரை பாகு கெட்டியாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
SHARE