
தேவையான பொருட்கள் :
முருங்கை கீரை – 1 கப்
பச்சரிசி – அரை கப்
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அரைக்க
தேங்காய் – கால் கப்
சோம்பு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 6

செய்முறை :
பச்சரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
முருங்கை கீரையை சுத்தம் கொள்ளவும்.
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து அதில் பச்சரிசி, முருங்கைக்கீரை, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் போட்டு வேக வைக்கவும்.
குக்கர் விசில் போனவுடன் குக்கா மூடியை திறந்து அரைத்த தேங்காய் கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
அனைத்தும் சேர்ந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.
அருமையான முருங்கை கீரை கஞ்சி ரெடி.