
பூர்ணா, மாஸ்டர் கபீஷ் கன்னா, பிர்லா போஸ், திவ்யா, பொன்ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் புளுவேல். புளுவேல் என்ற விளையாட்டுக்கு பலியான சிறுவன் பற்றிய உண்மைக்கதையை ரங்கநாதன் படமாக்கி உள்ளார்.
இந்த படத்தின் இசை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ஸ்ரீகாந்த் பேசியதாவது:- ‘ஆந்திராவிலும், கேரளாவிலும் சினிமாத்துறை நன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சரியில்லை என்று எல்லோரும் சினிமாவை குறை கூறுகிறார்கள். நடிகர் சங்கத்தில் ஒற்றுமையில்லை, தயாரிப்பாளர் சங்கத்தில் ஒற்றுமையில்லை. முதலில் நம் வீட்டில் ஒற்றுமை இருக்க வேண்டும். எப்போது நமக்குள் ஒற்றுமை இல்லையோ, அடுத்தவர்கள் வேடிக்கைப் பார்க்கத்தான் செய்வார்கள். அடுத்தவர்களைக் குறை கூறுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
