
பார்த்திபன் இயக்கத்தில் உருவான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் குறித்து வந்த ஒரு சில விமர்சனங்கள் பார்த்திபனுக்கு வேதனை அளித்துள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் நடந்த விழாவில் அவர் பேசும்போது, ‘கடந்த வாரம் எனது நடிப்பு, இயக்கம், தயாரிப்பில் வெளியான ‘ஒத்த செருப்பு’ படத்தை வெளியிட ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆனால் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
விமர்சனங்கள் எல்லாமே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு சிலர் மட்டும் கதையாக இது எனது சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்டதாக பதிவு பண்ணியிருந்தார்கள். அது ரொம்பவே வருத்தமான ஒரு விஷயம்.

அப்படி விமர்சனத்தில் குறிப்பிட்ட நண்பர்களுக்கு ஒரே ஒரு விஷயம், அப்படியொரு விஷயமே இல்லை. தேவையில்லாமல் ஒரு குழப்பத்தைச் சொல்லிக் கஷ்டப்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.