நவ்ரூ தீவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த சிறுவர்கள் கைது

435

 

நவ்ரு தீவில் அகதிகளின் அடிப்படை உரிமைக்காவும் அவுஸ்திரேலியாவின் கடும்போக்கு கொள்கையை கண்டித்தும் தங்களது எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகின்றது என்று தெரியாமல் தடுமாறிய சிறுவர்கள் கடந்த 3 தினங்களாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டும், சிறுவர்கள் நிறுத்த மறுத்த காரணத்தினால் 150க்கும் மேற்பட்டோர் நவ்ரு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த 13 வயதுடைய தலைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான இரு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நவ்ரு தீவு பொலிசார் தாக்கியமை, சிறுவர்களை கைது செய்தமை மனித உரிமை மீறல் என அகதிகள் அதிரடி கூட்டணி அமைப்பாளர் இயன் ரிண்டோல் வன்மையாக கண்டித்துள்ளார்.

SHARE