எகிப்தில் ஐ.ஸ் தீவிரவாதிகள் நடத்தும் திருமணத்தை போல் மணமக்கள் மணமுடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்தில் வடக் கெய்ரோவில்(North Cairo) உள்ள மெனோபியா(Menoufia) என்னும் பகுதியில் நேற்று அகமது ஷெஹட்டா- ஷாய்மா டெப்(Ahmed Shehata-Shaimaa Deif Age-25-23) என்ற இஸ்லாமிய மணமக்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆனால் இவர்களின் திருமணம் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அகமது தன் மனைவிக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் செயல் ஒன்றை செய்துள்ளார்.
இவர்களின் திருமணம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், திடீரென ஐ.எஸ் தீவிரவாதிகளை போல் வேடமிட்டு, முகமூடி அணிந்த நபர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்துள்ளனர்.
இதன்பின் இவர்களை சிறையில் அடைத்த அவர்கள் அரேபிய மொழிகளில் கோஷமிட்டுள்ளனர்.
அப்போது ஐ.எஸ்-யின் இஸ்லாமிய கீதம்(Islamic Anthem) பின்னணியில் ஒலித்துக் கொண்டே இருந்துள்ளது.
இதை பார்த்து முதலில் பயந்த ஷாய்மா, பிறகு தன் கணவர் விளையாட்டாகவே இவ்வாறு செய்துள்ளார் என்பதை புரிந்து கொண்டுள்ளார்.
தற்போது இணையதளத்தில் வெகு விரைவாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்த பலர், அகமதின் செயலுக்கு பலத்த எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதுகுறித்து ஷாய்மா கூறுகையில், ஐ.எஸ் தீவிரவாதிகளை எதிர்க்கும் நோக்கத்திலேயே என் கணவர் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்தார் என்றும் அவரது செய்தது ஒன்றும் தவறில்லை எனவும் கூறியுள்ளார்.