அரசியல்வாதிகள் கூடும் தேசிய நிறைவேற்று பேரவையினால் கைது செய்தல்கள் குறித்து தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் கிடையாது என சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
என்னைக் கைது செய்வது குறித்து நிறைவேற்றுப் பேரவையில் பேசப்பட்டமையானது சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் இவ்வாறு கைது செய்யப் போவதாக அறிவித்தமை எனக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும் கருதப்பட வேண்டும்.
தேசிய நிறைவேற்றுப் பேரவை என்பது அரசியல்வாதிகள் கூடும் ஓர் இடமாகும்.
அந்த இடத்தில் என்னை கைது செய்வது குறித்து பேசப்பட்டால் அது நல்லாட்சியாகுமா? என கோத்தபாய ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
அவன் கார்ட் சம்பவம் தொடர்பில் கோத்தபாயவை கைது செய்து விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன நேற்று ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.