காணாமல் போனோரது முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதியின் ஆனைக்குழுவின் இடைக்கால அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆணைக்குழு மேற்கொண்ட பரிந்துரை மற்றும் இதுவரை இடம்பெற்ற செயற்பாடுகள் குறித்த அறிக்கை மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பரணகம தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இவ் அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட இருந்தபோதும் அது பிற்போடப்பட்ட நிலையில் தற்போது அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யு.குணதாச தெரிவித்திருந்தார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தற்போது வடக்கு கிழக்கு பதிகளில் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இம்மாதம் திருகோணமலையில் விசாரணை நடத்திய ஆணைக்குழு அடுத்த மாதம் அம்பாறையில் விசாரணைகளை நடத்தவுள்ளது.
ஆணைக்குழுவிற்கு இதுவரை 20,000 ற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த ஆணைக்குழு சுட்டிக் காட்டியுள்ளது.