வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது சூர்யா மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக யுவன் பல டியுன்களை கொடுத்துள்ளார்.
இதில் ஒரு குத்து பாடல் சூர்யாவிற்கு பிடிக்க வில்லையாம். இதனால், இவர் இசையமைப்பாளர் தமனை அழைத்து கம்போஸ் செய்ய சொல்லி, அந்த பாடல் ஷுட்டிங் சென்று விட்டதாம்.
சூர்யாவின் செயல் யுவனை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியதாம். இதை தொடர்ந்து இந்த படத்திலிருந்து யுவன் விலகியதாக கூறப்படுகிறது. ஆனால், வெங்கட் பிரபு இது வதந்தி என கூறி முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
ஆனால், சிலர் படம் வந்தால் எல்லா உண்மையும் உடைந்து தானே ஆக வேண்டும் என கூறி வருகின்றனர்.