
பூஜா ஹெக்டே
தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ‘அருவா’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க இவரது பெயர் அடிபட்டது. ஆனால் ராஷி கன்னா தேர்வாகி உள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் பூஜா ஹெக்டே நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றன. இதனால் சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தினார். இந்தியில் சல்மான்கான் ஜோடியாக ‘கபி ஈத் கபி’ என்ற படத்தில் நடிக்கிறார். ஊரடங்கு முடிந்ததும் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

நெருக்கமான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க வேண்டுமானால் ரூ.3 கோடி சம்பளம் வேண்டும் என்று பூஜா ஹெக்டே கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை தேர்வு செய்வதா, வேண்டாமா? என்று படக்குழுவினர் யோசிக்கின்றனர்.