
சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா
கொரோனா பாதிப்பு குறித்து தமன்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “படப்பிடிப்பு தளத்தில் நானும் என்னுடைய குழுவும் மிகக் கவனமாக இருந்தும் கூட, ஒரு வாரத்துக்கு முன்பு நான் கொரோனா காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். தேவையான பரிசோதனைகளை செய்தபிறகு எனக்கு கொரோனா பாசிடிவ் எனத் தெரியவந்தது.
என்னுடைய நலனில் எப்போதும் அக்கறை கொண்ட நல்ல உள்ளத்தினர் அனைவருக்கும் எனது அன்பினை அனுப்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
எனவே ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் என்னை நானே அனுமதித்துக்கொண்டேன். மருத்துவர்களின் உதவியுடன் இப்போது குணமடைந்து வீடு திரும்பியிருந்தாலும், சில காலத்துக்கு என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டு இருக்க முடிவெடுத்திருக்கிறேன். கடுமையான காலத்தை கடந்து வந்தாலும் இப்போது நல்லபடியான உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

கொரோனாவுடன் போராடி வெளியே வந்துவிட்ட தமன்னாவுக்கு காஜல் அகர்வால், சமந்தா, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலரும் தங்களது அன்பை வெளிப்படுத்தி முன்பு போலவே கம்பீரத்துடன் சினிமாவுக்குத் திரும்பி வருமாறு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றனர்.