
விஜய் தேவரகொண்டா
தமிழில் நோட்டா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள விஜய்தேவர கொண்டா தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது: “நமது அரசியல் அமைப்பு சரியாக இல்லை. எல்லோருக்கும் ஓட்டுரிமை அளிப்பதும் சரியல்ல. விமானத்தில் மும்பைக்கு செல்வதாக இருந்தால் அந்த விமானத்தை யார் ஓட்டுவது என்று விமானத்தில் பயணம் செய்யும் 300 பயணிகள் ஓட்டுபோட்டு தேர்வு செய்வது இல்லை. தகுதியான விமானியை விமான நிறுவனமே அனுப்புகிறது.
ஆனால் அரசியலில் யார் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதை மக்கள் ஓட்டுபோட்டு தேர்வு செய்கிறார்கள். அரசியல்வாதிகள் ஓட்டுகளை பணம் கொடுத்தும், சாராயம் கொடுத்தும் வாங்கி விடுகின்றனர். பணம் இருப்பவர்களுக்கு ஓட்டுரிமை தேவை இல்லை. நடுத்தர மக்களுக்கு, படித்தவர்களுக்கு பணத்துக்கு விலை போகாதவர்களுக்கு மட்டும் ஓட்டுரிமை வழங்க வேண்டும். நிறைய பேர் யாருக்கு ஓட்டு போடுகிறோம் என்பது தெரியாமலே போடுகிறார்கள்.
