
டாப்சி
தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள டாப்சி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறார். சமூக வலைத்தளத்திலும் சர்ச்சை கருத்துகளை துணிச்சலாக பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், “சினிமாவுக்கு வந்த புதிதில் ஒரு படத்தில் நடித்தபோது, படத்தின் கதாநாயகனின் மனைவிக்கு என்னை பிடிக்காமல் போனதால் படத்தில் இருந்தே நீக்கி விட்டனர் என்றார்.
இந்தி பட உலகில் நிலவும் போதை பொருள் விவகாரம், வாரிசு அரசியல் போன்றவற்றை விமர்சித்த கங்கனா ரணாவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கங்கனாவின் ரசிகர்கள் டாப்சியை விமர்சித்தனர்.

நான் செய்ய வேண்டியது ஒரு விஷயம்தான். அது உங்கள் கண்களுக்கு தெரியாத தகுதியைத்தான். உங்கள் கருத்தை இன்னும் நான்கைந்து முறை பகிருங்கள். அது எனக்கு புரிகிறதா என்று பார்க்கிறேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.