கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால் படத்திலிருந்து விலகிய சமந்தா

200
முக்கியத்துவம் இல்லாததால் விஜய் சேதுபதி படத்தில் இருந்து சமந்தா விலகல்?

விஜய் சேதுபதி, சமந்தா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். இதனால் சமந்தாவுக்கும் நயன்தாராவுக்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சமந்தா நயனை தனது சகோதரியை போன்றே பார்த்ததாகவும் அக்கா, சேச்சி என்றெல்லாம் சமந்தா அழைப்பதாக கூறப்பட்டது.
சமந்தா, ராஷ்மிகாஇந்நிலையில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து சமந்தா விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் தனது முக்கியத்துவம் குறைவதால் சமந்தா இந்த முடிவை எடுத்ததாகவும், சமந்தாவுக்கு பதில் ராஷ்மிகாவை நடிக்க வைக்க படக்குழு முயற்சிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE