இலங்கை அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றியமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டெளரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பெற்றுக் கொண்ட பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.