வ/ கனகராயன்குளம் பாரதி முன்பள்ளி மழலைகளின் விளையாட்டுப்போட்டி 30.04.2015 அன்று நடைபெற்றது.
சசி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், வவுனியா வடக்கு முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.இராஜேஸ்வரன், ஆரம்ப பாடசாலை அதிபர் திரு.பாலகிருஸ்ணன், நெடுங்கேணி பிரதேசசபை உபதவிசாளர் திரு.தணிகாசலம், உறுப்பினர் திரு.ஜெயரூபன், கனகராயன்குளம் ம.வி அதிபர் திரு.நித்தியானந்தன், கனகராயன்குளம் வடக்கு கிராம சேவையாளர் பிறேம்லா, முன்பள்ளி சிறுவர் உத்தியோகத்தர் கீர்த்தனா, அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.