ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முரண்பாடுகள் களையப்படாவிட்டால் அக்கட்சி அழிந்து விடும். ஐ.தே.கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கருத்து வெளியிட்டார். மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோல்வி கண்டும் ஒதுங்கியிருக்காது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தி வருகிறார். இதனால் சுதந்திர கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது.
இது தொடருமானால் சுதந்திரக் கட்சி அழிந்து விடும். எனவே அதனை பாதுகாக்க அக்கட்சியினரே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சுதந்திர கட்சியின் பிளவானது, ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தி விடும். இவ்வாறான நிலை காரணமாகவே 1977 இல் ஐ.தே.கட்சி ஆட்சி ஏற்படுத்தப்பட்டு 17 ஆண்டுகள் தொடர்ந்தது.
அவ்வாறான சூழ்நிலையே தற்போது சுதந்திரக் கட்சிக்குள் தலைத்தூக்கியுள்ளது. எதிர்காலத்தில் அதிக பெரும்பான்மையுடன் ஐ.தே கட்சி ஆட்சி அமைக்கும் நிலைமையும் ஏற்படலாம்.
பிரித்தானியாவை அனைத்திற்கும் நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ளவிட்டாலும் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தோல்வி கண்ட தொழிற்சங்க கட்சி தலைவர் மிலிபான்ட் தோல்வியை ஏற்றுக் கொண்டு தனது பதவியை இராஜினாமா செய்து விலகி விட்டார்.
எனவே எமது நாட்டில் தோல்வி கண்ட தலைவர்களும் மிலிபான்டை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.