படையினரால் காணிகள் அபகரிக்கப்பட்டு பாதீக்கப்பட்ட மக்களுக்கே அதிகளவில் காணிகள் முசலி பகுதியில் வழங்கப்பட்டுள்ளது – குனைஸ் பாறுக் (வன்னி பாராளுமன்ற உறுப்பினர்)

352

வில்பத்து சரணாலயபகுதியில் சட்டவிரேமாக முஸ்லீம் மக்கள் காணிகளை அபகரித்துள்ளனர் என்ற விடயம் நாட்டில் பெரும் பிரச்சினைக்குரிய விடயமாக பேசப்படுதை கண்டிக்கும் முகமாகவும் காணிகள் ஏவ்வாறு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்பதினை தொழிவுபடுத்தும் ஊடகவியலளர் மகாநாடு ஒன்று இன்று திங்கள்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் குனைஸ்பாறுக்கினால் மறிச்சிகட்டி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் குனைஸ்பாறுக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்
வில்பத்து சரணாலய காணிகள் முஸ்லீம்களுக்கு பலவந்தமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் முஸ்லீம்களை அதிலிருந்து வெளியேற்ற வேண்டும்; என்றும் இன்று இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு கூட பிழையான தகவல்கள் கொடுக்கப்பட்டிருப்பதை பார்க்கும் பொழுது முசலியில் வாழும் முஸ்லீம் மக்கள் மிகவும் வேதனைபடுகிறார்கள். எனவே அவ்வாறு சொல்கின்றவர்கள் முசலி பிரதேசத்திற்கு வந்து உண்மை நிலையிணை பார்க்கவேண்டும் அல்லது இந்த முசலி பிரதேசத்தின் வரலாற்றை பர்க்கவேண்டும் அல்லது வில்பத்து சரணாயாலய எல்லைய பார்க்கவேண்டும் தற்போது இணைத்தளங்களில் கூட அதன் எல்லையை பார்க்கமுடியும் அதனை பார்த்துவிட்டு இது விடயமாக தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்று நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்

முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசமாக முசலிபிரதேசம் காணப்படுகிறது. இங்குவாழ்த மக்களின் விகிதாசாரங்களை 1990ம் ஆண்டு பகுதியில்; எடுத்து கொண்டால் முஸ்லீம்கள் 84 வீதமாகவும் தமிழ் மக்கள் 13.4 வீதமாகவும், சிங்கள மக்கள் 2.6 வீதமாகவும் காணப்பட்டது.ஆனால் யுத்தம் முடிவடைந்து மக்கள் தற்போது மீள்குடியேறியபின் விகிதாசாரத்தை பார்த்தால் முஸ்லீம்கள் 80.81 வீதம், தமிழ் மக்கள் 16.93 வீதமாக அதிகரித்துள்ளது.அதேபொன்று சிங்கள் மக்களின் விகிதாசாரமும் அதிகரித்துள்ளது.
இன்று ஊடகங்களில் வில்பத்து சரயாலயம் பிழையான முறையில் மக்களுக்கு பகிர்தளிக்கப்பட்டுள்ளதாக பொய்யான பிரச்சாரங்கள் பலரினால் முன்னெடுக்கப்படுகிறது. அதை நான் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் முசலி பகுதியினை சேர்ந்தவன் என்ற வகையிலும் குறித்த ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் பிழையானதேன கூறுவது மாத்திரமன்றி அக் கருத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
எனவே வில்பத்து என்பதற்கு ஒரு எல்லை இருக்கின்றது மோதரகம ஆறு என்ற ஆறுதான் வில்பத்துவின் எல்லையாக இருக்கிறது. எனவே ஆற்றிற்கு அப்பாற்பட்ட பிரதேசததில்தான் 1990ம் ஆண்டு இப்பகுதியில் இருந்த குடும்பங்களும் தற்போதுள்ள ஏனைய குடும்பங்களும் குடியேற்றபட்டிட வாழ்ந்துவருகிறார்கள்.
; எனவே இங்கு காணிகள் பகிர்ந்தழிக்கப்பட்டிருப்பது என்பது வன பாரிபாலன திணைக்களத்திற்கு செந்தமான காணிகள் முறைப்படி அந்த திணைக்களத்திலிருந்து விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளரினால் மக்களுக்கு முறையாக கையழிக்கப்பட்டுள்ளது. மற்றும் அராசாங்கத்திற்கு செந்தமான காணிகள் அரசாங்கத்தினால் முறைப்படி பகிர்தளிக்கப்பட்டுள்ளது.
எனவே இங்கு வாழ்கின்ற மக்களுக்கு அரை(1ஃ2) ஏக்கர் காணிகள் என்ற அடிப்படையில் தான் காணிகள் பகிர்தளிக்கப்பட்டுள்ளது. அது தனியே முஸ்லிம்களுக்கு மாத்திரம் அல்ல, தழிழ்,முஸ்லீம் .சிங்களவர் என்ற அடிப்படையில் தான் காணிகள் பகிர்தளிக்கப்பட்டுள்து.
குறிப்பாக கடற்படையினராலும், இராணுவத்தினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரதேசங்;களில் வாழ்ந்த கிராம மக்களுக்கே அதிகளவில் காணிகள் பகிர்தளிக்கப்பட்டுள்ளது. அதாவது 775 ஏக்கர் முள்ளிக்குளம் காணியும், 50 ஏக்கருக்கு மேற்பட்ட சிலாவத்துறை காணியும். சிங்கள மக்களுக்கு செந்தமான் கஜூவத்த காணியும் படையினரினால் கைப்பற்றப்பட்டிருப்பதால் அதற்கு மாற்றீடாகதான் காணிகள் இவ்விடத்தில் அதிகளவாக வழங்கப்பட்டிருப்பது தொடர்பான உண்மையை இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆயினும் இதற்கு மேலதீகமாக தனியார் யாருக்காவது காணிகள் வழங்கப்பட்டிருந்தால் அல்லது எவரேனும் காணிகளை பிடித்திருந்தால் அதனை பரிசோதனைசெய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இம் மக்களுக்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒரு குழுவின் சிபார்சில்தான் குறித்த காணிகள் வழங்கப்பட்டுள்ளது என்பதினை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

SHARE