தற்போதைய அரசாங்கம் சட்டத்தை மதிப்பதுடன், நீதிமன்ற தீர்ப்புக்களில் தலையீடு செய்வதில்லை.விஜயதாச ராஜபக்ச

371
தற்போதைய அரசாங்கம் நீதிமன்ற தீர்ப்புக்களுக்கு மதிப்பளித்து செயற்படுவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் சட்டத்தை மதிப்பதுடன், நீதிமன்ற தீர்ப்புக்களில் தலையீடு செய்வதில்லை.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு கட்டுப்படும்.

அந்த தீர்ப்பினை மாற்றியமைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது.

மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்திருந்தால் இவ்வாறான தீர்ப்பினை குப்பை கூடையில் வீசி எறிந்திருப்பார் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாயவின் அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE