மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிரதமர் வேட்பாளராக நிறுத்தாவிடின் கதிரை அல்லது சக்கர சின்னத்தில் களமிறங்குவார் என தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரைச்சின்னத்தில் அல்லது மக்கள் ஐக்கிய முன்னணியின் சக்கரச் சின்னத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது