தண்ணீர்ப் பிரச்சினையால் மாவிலாறில் ஆரம்பித்த இறுதிப் போரானது நந்திக்கடலில் நிறைவடைந்தது. இவ்வாறான ஒரு காலம் மீண்டும் இங்கு உருவாக நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. தேசிய பாதுகாப்புத் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கவோ ஊடுருவவோ ஒருபோதும் நாம் இடமளிக்கப்போவதில்லை

361

 

 

இலங்கையில் மூவின மக்களுக்கும் இடையிலான ஒற்றுமை பிற்காலத்தில் இல்லாமல் போனதாலேயே விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் அபிவிருத்தியில் குறியாக இருந்த கடந்த அரசு, இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தத் தவறியது. அத்துடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மனங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் தவறியது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். பிரிவினைவாதத்தை இந்நாட்டிலிருந்து தோற்கடித்து நாட்டில் அபிவிருத்தியையும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதே புதிய அரசின் இலக்காகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

image_handle (12) image_handle (13) image_handle (14)

தண்ணீர்ப் பிரச்சினையால் மாவிலாறில் ஆரம்பித்த இறுதிப் போரானது நந்திக்கடலில் நிறைவடைந்தது. இவ்வாறான ஒரு காலம் மீண்டும் இங்கு உருவாக புதிய அரசு இடமளிக்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளார். தேசிய பாதுகாப்புத் தொடர்பில் புதிய அரசு விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன் விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கவோ, ஊடுருவவோ ஒருபோதும் இடமளிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிப்போர் நிறைவடைந்த பின்னர் 6ஆவது தடவையாக இராணுவத்தினரை நினைவுகூரும் அணிவகுப்பு மாத்தறை கடற்கரை வீதியில் நேற்றுக் காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில் மேலும் கூறியதாவது:- “இத்தினமானது சரித்திர முக்கியத்துவம் மிக்கதாகும். நாட்டில் 30 வருடகாலம் நிலவிய கொடிய யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இந்த சுதந்திரத்தை எமக்கு அனுபவிப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்தமைக்காக முப்படைகளுக்கும் நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். யுத்தத்தில் உயிர்நீத்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரையும் இத்தருணத்தில் நாங்கள் நினைவுகூருகின்றோம். இவ்வாறான கசப்பான வரலாறு ஏன் எமக்கு ஏற்பட்டது என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும். 1948ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மூவின மக்களும் இணைந்து நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி வெற்றி கண்டனர். அப்போதிருந்த மூவின மக்களின் ஒற்றுமை பிற்காலத்தில் இல்லாமல் போனதாலேயே விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 1980ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த அரசுகள் இனங்களுக்கிடையிலான நல்லூறவைப் பேணாமையினாலேயே அந்நிலை உருவாகியது. பின்னர் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோதிலும் அதனை நாம் திருத்திக்கொள்ள கடந்த அரசு தவறியது. யுத்தத்தின் பின்னர் அபிவிருத்திப் பணிகளைச் செய்வதில் கவனம் செலுத்திய கடந்த அரசு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் உள்ளங்களை அமைதிப்படுத்துவதற்கான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவில்லை. அது மட்டுமல்லாது, இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், ஒற்றுமை, சகவாழ்வு இல்லாது போனதுடன் அதனைச் சரிசெய்ய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அபிவிருத்தியையும், இன நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதாக தெரிவித்து ஆட்சியில் அமர்ந்த புதிய அரசு அதனைச் செய்வதில் வெற்றி கண்டுள்ளது. அக்கொள்கைக்கு அமையவே இந்த அரசு எதிர்காலத்திலும் செயற்படும் என்று நான் உறுதியளிக்கின்றேன். தண்ணீர்ப் பிரச்சினையால் மாவிலாறில் ஆரம்பித்த இறுதிப் போரானது நந்திக்கடலில் நிறைவடைந்தது. இவ்வாறான ஒரு காலம் மீண்டும் இங்கு உருவாக நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. தேசிய பாதுகாப்புத் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கவோ ஊடுருவவோ ஒருபோதும் நாம் இடமளிக்கப்போவதில்லை. இனங்களுக்கிடையில் பிரிவினையைத் தூண்டும் வகையில் தற்போதும் சில அமைப்புகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலிருந்தும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. எனினும், இந்த அமைப்புகளின் செயற்பாடுகளை நாங்கள் முறியடித்துள்ளோம். இன்றைய நாள் சமாதானத்துக்குக் கிடைத்த நாள். இது இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் புதிய அத்தியாயமாக அமைகின்றது. அத்துடன், சமாதானத்தின் தேசமாக இலங்கை விளங்குவதற்கான புதிய அத்தியாயமாக இன்றைய நாள் அமைகின்றது’

SHARE