அஜித், விஜய்க்கு பிறகு சூர்யாவிற்கு தான் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நயன்தாராவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் மாஸ். இப்படம் வருகின்ற 29ம் தேதியன்று வெளிவர தயார் நிலையில் உள்ளது.
இதுவரை இதன் டீசர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இதனை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். வெளியிட்ட முதல் நாளிலிருந்தே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு வந்திருக்கிறது.
இந்த படத்துல வழக்கமான காதல் காட்சி இல்லை, இது ஒரு மர்மமான கதை என வெங்கட் பிரபு ஏற்கனவே கூறியிருந்தார். இதனால் இந்த படம் சூர்யாவுக்கு நல்ல மாஸா தான் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.