வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கிளர்ச்சியை அடக்க அரசாங்கம் விஷேட அதிரடிப்படையையும் இராணுவத்தையும் பயன்படுத்தியது.
இதன்போது 27 கைதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்ட பெயர்பட்டியலிலிருந்து அடையாளம் காணப்பட்டே கொல்லப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
கலவரம் முடிவடைந்த பின்னர் சனிக்கிழமை காலை சிறைச்சாலைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இப்போது வெளியாகி இந்த அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது. இவர்கள் மிகவும் நெருக்கமாக வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமையை இந்தப் படங்கள் உறுதிப்படுத்துகின்றன.