பெண்கள் வெளியில் செல்லும் போது முகம் மூடுவது (ஹிஜாப்) பற்றி இஸ்லாம் மார்க்கம் கூறும் தீர்வு என்ன?

வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-
பெண்கள் முகத்தை மூடுவது கூடாத காரியம், ஹராமான செயல், பாவமான காரியம், திறந்து தான் வைக்க வேண்டும். அதனை மீறி யார் முகத்தை மூடுகிறாரோ, அவர் இஸ்லாத்தைக் கேவலப்படுத்துகிறார் என்று வழிகெட்ட வஹாபிகள் விமர்சனம் செய்வது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடு என்பதுதான் எதார்த்தமான உண்மையாகும்.


முகமூடிய பெண்கள் செய்யும் சில தவறுகளை வீடியோ மூலம் வெளியிட்டு பெண்கள் முகம் மூடுவதால்தான் அவர்கள் பாவம் செய்கின்றார்கள் என்ற கருத்தை சொல்கிறார்கள். முதலில் அது உண்மையான வீடியோவா என்று கூட தெறியாது. சிலவேளை முகம் மூடும் முஸ்லீம் பெண்களை தவறாக சித்தரிப்பதற்கு கூட அந்த வீடியோ அந்நியர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஒருவேளை அந்த வீடியோ உண்மையாக இருந்தால் கூட அதை வைத்துக்கொண்டு முகம் மூடுதல் தவறு என்று கூற முடியாது.
ஏனெனில் இஸ்லாத்தில் ஒரு சில முஸ்லீம்கள் தவறாக நடக்கின்றனர் அதற்காக இஸ்லாம் தவறான மார்க்கம் என்று கூற முடியுமா? முடியவே முடியாது. ஏனெனில் இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கம் என நாம் அனைவரும் அறிந்த விடயம். அதேபோலதான் முகத்தை மூடிக்கொண்டு ஒரு சில பெண்கள் செய்யும் தவறை வைத்துக்கொண்டு பெண்கள் முகம் மூடுதல் தவறு என்று கூறவே முடியாது.

ஏனெனில் ஈமான் உள்ள பெண் முகத்தை மூடினாலும் அல்லது மூடாவிட்டாலும் அப்பெண் பாவம் செய்யமாட்டாள். ஏனெனில் அவள் அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறாள். ஆகவே நாம் முகம் மூடுதல் தவறு என கூறுவதை விட்டுவிட்டு நம் பெண்களிடத்தில் ஒழுக்கத்தையும் ஈமானையும் கொண்டு வரவேண்டும்.
ஏனென்றால் இவை இரண்டும் பெண்களிடத்தில் இருந்தால் அவர்கள் முகம் மூடினாலும் அல்லது முகத்தை மூடாவிட்டாலும் அல்லாஹ்வின் அச்சத்தினால் பாவம் செய்யமாட்டார்கள். அந்த அடிப்படையில் பெண்கள் முகத்தை மூடுதல் சிறந்தது, தக்வா எனும் பேணுதல் என்று கூறப்படுவதற்கு காரணம் அவர்களை அந்நிய காம நோய்யுள்ள சில ஆண்களின் பார்வையிருந்து அல்லது சில ஆண்களின் தொல்லையிலிருந்து பாதுகாக்கவே. இது 100% சரி என்று நாம் அனைவரும் அறிந்த விடயம். ஆகவே இனிமேலும் இவ்வாறு பெண்கள் முகத்தை மூடுதல் தவறு, பாவம், ஹராம் என்று கூறவே வேண்டாம்.

1) பெண்கள் முகத்தை மறைப்பது வாஜிப், சுன்னத், பேணுதல், சிறந்தது என்று மறைக்க வேண்டியதில்லை என ஒரு சாராரும்.
2) பெண்கள் கட்டாயம் (வாஜிப்) முகத்தை மறைக்க வேண்டும் என்று மற்றொரு சாராரும்.
3) பெண்கள் முகத்தை கட்டாயம் (வாஜிப்) மறைக்க வேண்டியதில்லை, ஆனாலும் சில சமயம் – சூழல், சூழ்நிலைகளை கவனித்து கெட்ட காம எண்ணம் – சிந்தனைகள் உள்ள அன்னிய ஆண்களிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தக்வா எனும் பேணுதல் அடிப்படையில் பெண்கள் முகத்தை மூடுவது – மறைத்துக் கொள்வது பாதுகாப்பு பேணுதலாகும் என இன்னும் ஒரு சாராரும் கூறுகிறார்கள். அந்த அடிப்படையில் மூன்றாவது கருத்தே மிகச் சரியானதாகும்.


பொதுவாக ஒரு பெண்மணி ஹிஜாப் போடுவது அதாவது வீட்டிலிருந்தாலும் ஹிஜாபாக இருப்பதுதான் அர்த்தமாகும். உதாரணமாக நமது வீட்டிற்கு ஆண்கள் வந்தால் வெளியிலிருந்து ஆண்களும் – உள்ளே இருந்து பெண்களும் பேசுவார்கள் இதுவும் ஹிஜாப்தான். அதனால் பெண்கள் வெளியே வந்தால்தான் ஹிஜாப் என்பது அர்த்தமல்ல.
ஹிஜாப் என்றால் மறைத்திருத்தல் என்று அர்த்தமாகும். அந்த அடிப்படையில் ஒரு ஆண் அன்னிய பெண்ணையும் ஒரு பெண் அன்னிய ஆணையும் பார்க்க கூடாது என்ற பொதுவான சட்டத்தை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். இது வீட்டிலே இருந்தாலும் இந்த ஹிஜாபை பேணவேண்டும்.


பெண்களின் அவ்ரத் என்று வரும்போது முகம், இரண்டு மணிக்கட்டுகள் இவை இரண்டையும் தவிர மற்ற அனைத்தையும் மறைக்கப்பட வேண்டும். தலையையும் கூட முழுமையாக மறைக்க வேண்டும். காரணம் வெளியில் செல்லும் போது இவர்கள் யார் என்பதை அவர்களின் உறவினர்கள் அடையாளம் கண்டுகொள்ள, சாட்சி சொல்வதற்க்காக, கடன், கொடுக்கள் – வாங்கள், வியாபாரம் செய்யும் போது இன்னார் என்று தெரிய வேண்டும் என்பதற்காகதான் முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது.
அதேபோன்று தமது வேளைகளை செய்வதற்கு, எழுவதற்கு பாத்திரங்களை கழுவதற்கு இரண்டு கைகளும் திறந்து இருந்தால்தான் செய்ய முடியும். மாறாக கைகளையும் மறைத்து உரைபோட்டிருந்தால் அத்தியாவசியமான வேளைகளை செய்ய முடியாது. அந்த அடிப்படையில் பொதுவாக முகம், இரண்டு மணிக்கட்டுகள் திறந்து இருந்தால் தான் இந்த பணிகளை வேளைகளை செய்ய முடியும்.
ஆகையினால் பெண்கள் இந்த இரண்டையும் மறைக்க வேண்டியதில்லை என்பதனால் ஆண்கள் பெண்களுடைய முகத்தை, கைகளை பார்க்கலாம் என நாம் புரிந்து கொள்ளக்கூடாது. ஒரு ஆண் அன்னிய பெண்ணையும், ஒரு பெண் அன்னிய ஆணையும் பார்க்கக் கூடாது என்பதுதான் சட்டம். எனவே மறைக்க வேண்டியவை என்பது வேற – பார்த்தல் சட்டம் என்பது வேற.
மேலும் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் சில சூழ்நிலைகளில் அதாவது அன்னிய ஆண்கள் உள்ள இடங்களில் அதில் மோசமான எண்ணங்கள், காம நோய்யுள்ள உள்ளங்கள் இப்படிப்படட சில ஆண்கள் இருப்பார்கள். பெண்கள் முகத்தை மறைப்பது அவசியமில்லையென்றாலும் அப்படியான ஆண்கள் உள்ள இடத்தை கடந்து செல்வதற்க்காக முகத்தை மறைப்பது தக்வா எனும் பேணுதல் அடிப்படையில் கூடுமான சிறந்த செயலாகும்.
இந்த செயல் பெண்கள், ஆண்கள் இரு சாராருக்கும் நல்லதாகும். எனவே பெண்கள் முகம் மூடுவது கடைமையில்லை என்பது எதார்த்தமான சட்டமாகும். சூழ்நிலைகள் என்று வரும்போது அதாவது பெண்கள் முகத்தை மூடுவது கடமையில்லை என்று ஆண்கள் மத்தியில் முகத்தை திறந்து காட்டிக்கொண்டு செல்லாமல் வெட்க உணர்வை காட்ட வேண்டும் என்ற அடிப்படையில் யாருடைய உள்ளங்களும் என்னத்தால் பாவங்கள் செய்துவிட நாம் வழிவகுத்துவிடக் கூடாது. சூழ்நிலைக்கும் தேவைகளுக்கு ஏற்றவாரும் பெண்கள் முகங்களை மறைத்துக் கொள்வது பாதுகாப்பான பேணுதலான சிறந்த காரியமாகும்.



அறிவிப்பாளர்: ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு
நூல்: முஸ்லிம்
முக்காடாக பெண்கள் தலையை மறைத்துள்ளார்கள் என்பதும் இந்த செய்தியிலிருந்து விளங்கலாம்.


அறிவிப்பவர் ஹழ்ரத் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்கள் – முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்

அறிவிப்பவர்: ஹழ்ரத் புரைதா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்கள் – திர்மதீ, அபூதாவூத்

அறிவிப்பவர்: ஹழ்ரத் உம்மு ஸலாமா (ரலியல்லாஹு அன்ஹா)
நூல் – திர்மிதீ

இந்த ஹதீஸினை நோக்கும் போது பெண்கள் முகத்தை மூடுவது தக்வா எனும் பேணுதல் அடிப்படையில் முகத்தை மறைப்பது சிறந்ததாகும். ஏனென்றால் இந்தச் செய்தியில் ஆண்கள் பெண்களைக் கடந்து செல்லும் போது பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவி ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பெண்களுக்கு முன்மாதிரியாக நடந்துள்ளார்கள்.
ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள், பர்தா (சட்டம்) தொடர்பான இந்த இறைவசனத்தை மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் துணைவியாரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலியல்லாஹு அன்ஹா) இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களிடம் மணப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுடன் வீட்டில் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (‘வலீமா’ விருந்துக்கான) உணவைத் தயாரித்து மக்களை அழைத்தார்கள். மக்கள் (சாப்பிட்டுவிட்டு) பேசிக்கொண்டே அமர்ந்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வெளியே வரவும் திரும்பச் செல்லவுமாக இருந்தார்கள். மக்களோ பேசிக் கொண்டே அமர்ந்திருந்தனர்.
அப்போதுதான் அல்லாஹ்’ இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்கவேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 33:53 வது) வசனத்தை அருளினான். இதையடுத்துத் திரை போடப்பட்டது. மக்களும் எழுந்து விட்டார்கள்.
ஸஹீஹூல் புஹாரி- 4792
இங்கே அல்குர்ஆனிய வசனம் அருளப்பட்டதன் பின் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவிக்கும் மக்களுக்கும் திரைபோடப்பட்டது என்பது தெளிவாகிறது. இதன் அர்த்தம் முஃமீன்களின் அன்னையர் அறைகுறை ஆடைகளுடன் இருப்பார்கள் என்பதல்ல மாறாக அவர்களை பார்க்க முடியாது என்பது தெட்டத் தெளிவாகிறது.


இவ் விதிவிலக்கானது இஹ்ராம் அல்லாத நிலையில் பெண்கள் முகத்தை மூடுவது தக்வா எனும் பேணுதல் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
எனவே மேலே குறிப்பிடப்பட்ட குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் அடிப்படையில் கெட்ட – காம நோயுள்ள அன்னிய ஆண்கள் உள்ள இடங்களில் அவர்கள் மோசமான எண்ணங்கள் கொண்டு பார்ப்பார்கள் என்றால் அந்த இடத்திலிருந்து கடந்து செல்வதற்காக பெண்கள் முகத்தை மூட வேண்டும் அது தக்வா எனும் பேணுதல் அடிப்படையில் கூடுமான சிறந்த செயலாகும்.
