கள்ளப்பாடு கிராம நீண்டகால கோரிக்கை.  நிறைவேற்றினார் டாக்டர். சி.சிவமோகன்

318
நீண்டகாலமாக கள்ளப்பாடு இந்து மயானத்தின் எவ்வித மறைப்புக்களும் அற்ற இடத்தில் வீதி ஓரத்தில் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டு வந்தது. மேற்படி விடயம் ஒரு சமூக பிரச்சனையாகவும், உளவியல் பிரச்சனையாகவும் இருந்து வந்தது. வேறு இடம் ஒன்றிற்கு மாற்றவும் முடியாத அளவுக்கு ராணுவம் அரச காணிகளில் அதிகாரம் வேறு செலுத்திக் கொண்டிருக்கிறது.
இறுதியில் பொது மக்கள் ஒன்றுகூடி 10 அடி உயர மதில் கட்டி மயானத்தை வளப்படுத்துவது என முடிவெடுத்தனர். அதனடிப்படையில் உதவ முன்வந்த வைத்திய கலாநிதி சி. சிவமோகன் ஆரம்ப பணியை 5 லட்சம் ரூபா தனது வடமாகாணசபை நிதி ஒதுக்கீட்டுடன் ஆரம்பித்து வைத்தார்.
மேற்படி அடிக்கல் நாட்டு விழாவில் கள்ளப்பாடு கிராம மாதர்சங்க, கடல் தொழிலாளர் சங்க, கிராம அபிவிருத்தி சங்க, வன்னி குறோஸ் சுகாதார நிறுவன உறுப்பினர்கள் என அனைத்து கிராம மக்களும் திரண்டு வைத்திய கலாநிதி சி. சிவமோகனுடன் ஆரம்பித்து வைத்தனர்.
12 13
SHARE