சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான 3 கிலோ கிராம் ஹெரோய்னுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
தங்களுக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேகநபரை சற்றுமுன்னர் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு வாகனங்களில் கடத்தப்பட்டபோதே ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த வாகனங்களிலிருந்து 2.4 மில்லியன் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.