ஜீவா இறந்த பிறகு- ஷாம் உருக்கம்

363

12 பி, உள்ளம் கேட்குமே படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஷாம். இவர் ஒளிப்பதிவாளர்+இயக்குனர் ஜீவாவின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இந்நிலையில் இவர் காதல் படங்கள் மட்டுமின்றி 6 மெழுகுவர்த்திகள், புறம்போக்கு போன்ற தரமான படங்களிலும் நடித்து தன் நடிப்பை நிரூபித்தவர்.

இவர் சமீபத்தில் ’எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் வந்தவன் நான். என்னை குருநாதர் ஜீவா அறிமுக​ப்படுத்தினார். ஊக்கம் தந்து வளர்த்தார். அவரும் திடீரென காலமாகிவிட்டார். கைதுதூக்கி விட யாருமில்லை. ​கீழே தள்ளிவிட நிறைய பேர் இருக்காங்க’ என உருக்கமாக கூறியுள்ளார். தற்போது இவர் ‘ஒரு மெல்லிய கோடு’ என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

SHARE