போதை பொருள் பாவனையை மாணவர்கள் மத்தியில் இல்லாது செய்ய அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் – யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

யாழில் போதை பாக்கு தயாரிக்க பயன்படுத்தும் உபகரணங்களை யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.கே வூட்லர் தலைமையிலான பொலிஸ் குழு கைபற்றியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை பாடசாலை மாணவர்கள் இருவரிடம் இருந்து போதையூட்டியபாக்கு கைப் பெற்ற ப்பட்டது. அது தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம், வண்ணார் பண்ணை மற்றும் ஓட்டுமடத்தை சேர்ந்த இருவரை பொலிசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அவர்களிடம் இருந்து போதை பாக்கு தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்ற பட்டன.
போதை பொருள் பாவனையை மாணவர்கள் மத்தியில் இல்லாது செய்ய அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் – யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி:-
போதை பொருள் பாவனையை மாணவர்கள் மத்தியில் இல்லாது செய்ய அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் என யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் வெள்ளிகிழமை இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாணவர்கள் மத்தியில் போதை பொருள் பாவனை காணப்படுவதாக தெரிவிக்கபடுகின்றது. குறிப்பாக மாவா எனும் போதை பொருளும் போதை ஊட்டப்பட்ட பாக்கு பாவிகின்றார்கள். அதனை கட்டுப்படுத்த பொலிசார் ஆகிய நாம் சகல நடவடிக்கையையும் எடுத்து வருகின்றோம்.
அவற்றை கட்டுப்படுத்த எமக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கோரினார்.
அதன் போது ழ்.மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரி கௌதமன் கருத்து தெரிவிக்கையில்,
சில பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியில் போதை பொருள் பாவனை உள்ளதாக எமக்கு ரகசிய தகவல் கிடைத்து அப் பாடசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து செல்லும் போது ஒரு கட்டத்தின் மேல் எமக்கு பொலிசாரின் உதவி தேவை படுகின்றது.
அதற்கு பொலிசாரை அழைக்க பாடசாலை அதிபர்கள் அனுமதிகின்றார்கள் இல்லை பாடசாலைக்கு பொலிசார் வருவதை அவர்கள் ஏற்றுகொள்கின்றார்கள் இல்லை அதனால் எம்மால் ஒரு கட்டத்திற்கு மேல் செல்ல முடியாது உள்ளதாக தெரிவித்தார்.
அப்பொழுது வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் வடமாகாண கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலை அதிபர்களுக்கு உங்களது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுத்தல்களை அனுப்பி வைக்கின்றோம் என தெரிவித்தார்