அச்சுவேலி பாடசாலையும் நூற்றாண்டுகளை கடந்து விட்ட பாடசாலை- த.குருகுலராசா.

366

 

யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகள் நூற்றாண்டுகளை கடந்த பாடசாலைகளாகவே காணப்படுகின்றது. பல பாடசாலைகள் இருநூறு ஆண்டுகளை எட்டப்போகின்றது என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி மத்திய கல்லூரியின் புதிய கட்டடத்தொகுதியை முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த அச்சுவேலி பாடசாலையும் நூற்றாண்டுகளை கடந்து விட்ட பாடசாலை.

நாம் நம் முன்னோர் இந்தப்பிரதேசங்களில் கல்விச் சிந்தனையோடு தொன்மையாக வாழ்ந்தோம் என்பதற்கு இந்த பாடசாலைகளும் சான்று.

நூற்றாண்டுகளாக நாம் வாழ்ந்த இடங்களில் இதனை அண்டிய பிரதேசங்களில் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக இராணுவத்தினர் ஆக்கிரமித்து வாழ்ந்து வருகின்றனர்.

அச்சுவேலியை பொறுத்தவரையில் பல செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகளை நகரப்புற பிரபல பாடசாலைகளில் சேர்க்கின்றனர். எஞ்சியவர்கள் தான் இங்கே படிக்கின்றனர்.

வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் யாழ் வலய கல்விப்பணிப்பாளர்கள் சொன்னதைப்போல நாம் பெறுபேறுகளில் வீழ்ச்சி காணப்படுகின்ற பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்களை அழைத்து ஆராய இருக்கின்றோம்.

நூற்றாண்டு கண்ட பாடசாலைகளின் கல்வித்தரத்தை உயர்த்த பெற்றோர்கள் கிராமத்தின் மக்கள் இணைந்து பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்தத்திறப்பு விழா நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மகாண கல்விப்பணிப்பாளர், யாழ் வலய கல்விப்பணிப்பாளர், கல்வி அதிகாரிகள், வலயக்கல்வி பணிமனை பொறியியலாளர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

SHARE