ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் ஸ்தாபகரும் தலைவருமான தோழர் பத்மநாபா அவர்களின் 25 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில்

361

 

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் ஸ்தாபகரும் தலைவருமான தோழர் பத்மநாபா அவர்களின் 25 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கடந்த 1990.06.19 அன்று படுகொலை செய்யப்பட்ட தோழர் பத்மநாபா மற்றும் 12 பேரின் நினைவாக தியாகிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் 25 ஆவது நினைவு நாள் இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அஞ்சலி நிகழ்வுகளுடன், பத்மநாபா நினைவாக பாடல் வெளியீடு, மாணவர் மத்தியில் நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில் வழங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சி தலைவருமான மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப் தலைவருமான சுரேஸ் பிறேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவரும் வடமாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயக மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளர் பாஸ்கரா, வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, க.சர்வவேஸ்வரன், து.ரவிகரன், சி.சிவமோகன், எம்.பி.நடராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

image_handle (1) image_handle pathmanapa ggg441123

SHARE