சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியது பொய்யாக இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

340

 

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியது பொய்யாக இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

18

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தவோ அவருக்கு தேசிய பட்டியலில் வாய்ப்போ வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி கூறியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.

தான் கூறியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தது தவறானது என ராஜித ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

கடந்த 19ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில், ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தவோ, அவருக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பத்தை வழங்கவோ, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கவோ தாம் தயாரில்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால், முன்னாள் ஜனாதிபதிக்கு கௌரவமான பதவி ஒன்றை வழங்க முடியும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன், மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகதீர் மொஹமட், சிங்கப்பூரின் லி குவான் யூ ஆகியோர் பதவி கைவிட்ட பின்னர் நாட்டுக்கு சேவையாற்றிய விதத்தில், மகிந்த ராஜபக்சவுக்கும் நாட்டுக்கு சேவை செய்யும் வகையில் சந்தர்ப்பம் கிடைக்கும்.

மகிந்த ராஜபக்ச அந்த கௌரவமான பதவியை வகித்து கொண்டு இலங்கையின் சார்பில் வெளிநாடுகளுக்கு செல்லவும், இலங்கைக்காக சர்வதேச தொடர்புகளை கட்டியெழுப்பவும் முடியும் என ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்

SHARE