உணவு விஷமடைந்ததால் 200 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

336

 

அவிசாவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 200 பேர் உணவு விஷமடைந்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஊழியர்கள் நேற்று மதிய உணவு உண்ட பின்னரே சுகவீனமடைந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சீதாவக்கை கைத்தொழில் வலயத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் ஊழியர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

200க்கும் அதிகமான ஊழியர்கள் இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE