பூட்டிய வீட்டின் முன்பாக கவனிப்பாறற்று இருந்த இரு சிறுமிகள் தொடர்பில் பிரதேச செயலக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஊடகவியலாளர்கள்

369

 

பூட்டிய வீட்டின் முன்பாக கவனிப்பாறற்று இருந்த இரு சிறுமிகள்

தொடர்பில் பிரதேச செயலக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற

ஊடகவியலாளர்கள்

unnamed (3) unnamed (4) unnamed (5) unnamed (6) unnamed (7) unnamed (8)

 

பூட்டப்பட்ட வீடு ஒன்றின் முற்றத்தில் தனிமையில் படுத்திருந்த இரண்டு

சிறுமிகள் தொடர்பில் வவுனியா ஊடகவியலாளர்களால்  வவுனியா வடக்கு பிரதேச

செயலக உத்தியோகத்தளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள சம்பவம்

இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதிக்கு வவுனியா ஊடகவியலாளர்கள்

மூவர் நேற்று மதியம் செய்தி சேகரிப்பதற்காக சென்ற போது பற்றைகளால்

சூழப்பட்ட பூட்டப்பட்ட வீடு ஒன்றின் வெளி முற்றப் பகுதியில் தனிமையில்

படுத்திருந்த 4 வயது, 3 வயது சிறுமிகள் மீது சந்தேகம் கொண்டு அயலவர்களின்

உதவியுடன் சிறுமிகளிடம் அவர்களின் குடும்பம் தொடர்பில் கேட்டறிந்துள்ளனர்.

இந் நிலையில் பாடசாலையில் இருந்து அங்கு வந்த மேலும் இரு 6 வயது, 7 வயது

சிறுமிகளும் அங்கு வந்துள்ளனர்.

இதன்போது அயலவர்களிடம் இச் சிறுவர்கள் தொடர்பில் கேட்டபோது சிறுமிகளின்

தாயார் வெளிநாடு ஒன்றுக்கு தொழில் வாய்ப்புக்காக சட்டவிரோதமான முறையில்

சென்றுள்ள நிலையில் அச் சிறுமிகள் தமது தாயின் இரண்டாம் தர கணவருடனேயே

வசித்து வருவது தெரியவந்தது.

அவரும் கூலி வேலைக்காக வெளியில் செல்லும் போது வீட்டை பூட்டி செல்வதால்

சிறுமிகள் நால்வரும் பற்றைகளால் சூழப்பட்ட அந்த வீட்டின் முற்றப்

பகுதியிலேயே தமது பகல் பொழுதை கழித்து வந்துள்ளனர்.

பகல் நேரங்களில் பாடசாலைகளில் கொடுக்கப்படும் சாப்பாட்டையே உணவாக

உட்கொண்டுளளமையும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஊடகவியலாளர்கள் இச் சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு

அதிகாரசபை மற்றும் வவுனியா வடக்கு சிறுவர் உரிமை மேம்பாட்டு

உத்தியோகத்தரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இந் நிலையில் சம்பவ இடத்திற்கு கிராம சேவகர், கனகராயன்குளம் பொலிசார் வருகை

தந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந் நிலையில் சிறுமிகளின் தந்தையாரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நிலையில்

சிறுமிகளின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் தொடர்பில் ஊடகவியலாளர்கள்

கேள்வி எழுப்பியிருந்த நிலையில் இது தொடர்பில் பிரதேச செயலக அதிகாரிகள்

கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

இதேவேளை தந்தையின் அனுமதி இன்றி சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும்

ஆரோக்கியத்திற்காக சிறுமிகளை தாயார் வெளிநாட்டில் இருந்து வரும் வரை

சிறுவர் இல்லத்தில் விடுவதற்கு தமக்கு அனுமதி இல்லை என தெரிவித்து இவ்விடத்தில்

இருந்து நகர்ந்து சென்றுள்ளனர்.

இந் நிலையில் சிறுமிகளின் பாதுகாப்பு தொடர்பில் வவுனியா ஊடகவியலாளர்கள்

குழு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

SHARE