கிளிநொச்சி பஸ் விபத்தில் இளம்பெண் பலி
மேற்படி சம்பவம் தொடர்பாக தெரிய வருகின்றது. இன்றைய தினம்(24-06-2015)
பரந்தன் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற தனியார் பேருந்து
பரந்தன் நெற் சந்தைப்படுத்தல் சபைக்கு அருகாமையை வந்த சமயம் முன்னால் சென்ற
இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை வேகமாக விலத்த முற்ப்பட்ட
போது கிளிநொச்சி பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி மோட்டார்
சைக்கிலில் சென்ற பெண் மீது மோதியதில் பெண் ஸ்தலத்திலேயே மரணம்
அடைந்துள்ளது.
இந்த மரண சம்பவம் தனியார் பேருந்து வேகமாக இலங்கை போக்கு வரத்துக்கு சபைக்கு
சொந்தமான பேருந்தை விலத்த முற்ப்பட்ட போதே நிகழ்ந்தாக தெரிய வருகின்றது.
மரணம் அடைந்தவரின் உடல் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதுடன்
மேற்படி சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ்சார் விசாரனையை மேற்
கொண்டு வருகின்றனர்