பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் நிதிக்குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
ஏன் சில அரசியல்வாதிகள் கைது செய்யப்படவில்லை என மக்கள் கேள்வி எழுப்புவதாகத் தெரிவித்துள்ள அவர்,
ஊழல் மோசடிகள் குறித்து உறுதியான ஆதாரங்கள் காணப்பட்டால் அவர்களை கைது செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சில முக்கியஸ்தர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அங்கு அவர் குறிப்பிட்டார்.