ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து தான் வெளியேறியமை 37 வருடங்களாக செய்ய முடியாத நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அதிகாரங்களை குறைக்கவே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

360

 

கடந்த வருடம் நவம்பர் 21 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 8ஆம் திகதிவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தன்னை ஒரு துரோகி பேன்று நோக்கியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து தான் வெளியேறியமை 37 வருடங்களாக செய்ய முடியாத நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அதிகாரங்களை குறைக்கவே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

60e7665555aed397f245d17f269425d3_L

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாணவர் அணி இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு: முன்னாள் தலைவர்கள் செய்யாத ஒன்றை அதிகாரம் கிடைத்ததும் நான் அதனைச் செய்து முடித்தேன். 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டாலும், 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதில் சிக்கல் நிலை தோன்றியது. இருப்பினும் எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெற்றாலும் 100 நாட்களில் தேர்தல் சட்டத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- என ஜனாதிபதி தெரிவித்தார்.

SHARE