தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் வேட்பாளர் நியமனம் மற்றும் ஆசன பங்கீடு தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

331

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் வேட்பாளர் நியமனம் மற்றும் ஆசன பங்கீடு தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

0001

இது தொடர்பாக எதிர்வரும் 4ம் திகதி கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மினிக்கப்படும் என லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணில் அவர் தெரிவித்தார்.

விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்வரும் 4ம் திகதி வவுனியா மாவட்டத்தில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுடைய கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ள வன்னி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கட்சிகளுக்கான ஆசன பங்கீடு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.

முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக,

மஹிந்த ராஐபக்‌ஷ மீண்டும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்திருக்கும் நிலையில் இது தென்னிலங்கையில் பெரும் போட்டியாக இருக்கும். குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்குகள் இரண்டாக உடையும் வாய்ப்புள்ளதுடன், இதனை சாதகமாக பயன்படுத்தி ஐ.தே.கட்சி அதிக வாக்கு பெறும் நிலை உருவாகலாம் என்றார்.

ஊழல்களை மூடி முறைக்க பிரதமராக முயற்சிக்கும் மஹிந்த: சுரேஸ் பிறேமச்சந்திரன்

கடந்த ஆட்சியின் போது மேற்கொண்ட ஊழல்களை மூடிமறைப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்கு வர முயற்சிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் குடும்பம் உட்பட அந்த அரசில் அங்கம் வகித்த பெரும்பாலானவர்கள் ஊழல் மோசடிகளில் சிக்கியவர்களே. இவர்களின் ஊழல்கள் நடைமுறை அரசின் மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டதால், அதனைத் தடுப்பதற்கான வழியாக மஹிந்த மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

தேர்தலில் வெற்றிபெற்று தம்முடைய ஊழல்களை மறைப்பதற்கு தன்னை ஒரு ஜனநாயகவாதியாகவும், ஊழலற்றவராகவும் சிங்கள மக்கள் மத்தியில் காட்டி மீண்டும் அதிகாரத்துக்கு வரப் பார்க்கின்றார். உண்மையில் இவர் ஊழலற்றவர் என்றால், அவர் உட்பட அவர் குடும்பத்தின் மீது சுமத்தப்பட்ட ஊழல்களுக்குப் பதிலளித்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மஹிந்த நேற்று அறிவித்துள்ளமை தொட்பில், சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்து வெளியிட்டார்

SHARE