ஸகாப்ரோவில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம்

82

 

ஸகாப்ரோவில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் பிற்பகல் வேளையில் இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக றொரன்டோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குயில்ட்வில் பார்க் மற்றும் கிங்ஸ்டன் வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நடைபாதை வழியாக பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்த போது வாகனத்தில் வந்த ஆண் ஒருவர், பெண்ணை வழி மறித்து வாகனத்தில் பலவந்தமாக தள்ளி கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் குறித்த வாகனம் வேகமாக அங்கிருந்து நகர்ந்து விட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் 20 முதல் 30 வயதுடையவர் எனவும், கறுப்பு முடியைக் கொண்டவர் எனவும் தெரிவிக்கின்றனர்.சந்தேக நபர் இளம் நிறத்திலான சேர்ட் அணிந்திருந்தார் எனவும் தலையில் தொப்பி வைத்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.பெண்ணை கடத்திய வாகனம் வெள்ளை நிறத்திலான இரண்டு அல்லது நான்கு கதவுகளை உடைய வாகனமாக இருக்க வேண்டுமென பொலிஸார் ஊகம் வெளியிட்டுள்ளனர்.

ஏதேனும் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் 416-808-4300 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

SHARE