மாணவி மீது துரத்தித் துரத்தி தாக்குதல்

76

 

அதிபர் ஒருவர் மாணவி ஒருவரை தும்பு தடியால் தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கொட்டக்கலை போகாவத்தை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவியே இதில் பாதிக்கப்பட்டுள்ளார். அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி காயங்களுடன் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகாத வார்த்தை பிரயோகங்கள்
பாடசாலையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஆசிரியர் விருந்து விழாவிற்கு 300 ரூபாவினை தலா ஒவ்வொரு மாணவரும் தரவேண்டும் என பாடசாலையின் நிர்வாகம் அறிவித்துள்ளது. சில மாணவர்கள் குறித்த தொகையை செலுத்தியுள்ளதோடு சிலர் செலுத்த வில்லை.

இந்நிலையில், பணம் செலுத்தாத மாணவர் ஒருவரை, உடனடியாக பணத்தினை செலுத்துமாறு தகாத வார்த்தை பிரயோகங்களினால் திட்டியுள்ளார்.

இதனை பார்வையிட்ட மாணவரின் மூத்த சகோதரி ”தனது தந்தை பாடசாலைக்கு அருகிலேயே கடமையாற்றுவதாகவும், நான் பணத்தை வாங்கி தருகின்றேன் எனவும், தம்பியை திட்ட வேண்டாம்” எனவும் அதிபரிடம் கோரியுள்ளார்.

கதறி அழுத மாணவி
எனினும், மாணவியின் கோரிக்கையினை செவிமடுக்காத அதிபர் மாணவியை தொடர்ச்சியாக துரத்தி தும்புத்தடியால் தாக்கியுள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது. அதிபரின் தாக்குதலை தாங்க முடியாத மாணவி கதறி அழுதுள்ளார்.

இதன் போது பாடசாலைக்கு அருகில் கடமையாற்றிக்கொண்டிருந்த தந்தை மகளின் அழுகைக்குரலை கேட்டு ஓடிவந்து, மகளை அதிபரின் தாக்குதலில் இருந்து காப்பாற்றியுள்ளார்.

இதனையடுத்து குறித்த மாணவி கொட்டகலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE