எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துகொண்டுள்ள கட்சிகள்

340

 

எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துகொண்டுள்ள கட்சிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

image_handle (1) image_handle

கொழும்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, செயலாளர் கபீர் காசிம், அமைச்சர் கரு ஜயசூரிய ஆகியோர் கையொப்பமிட்டனர். ஜாதிக ஹெல உறுமய சார்பில் அதன் தலைவரும் அமைச்சருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்க, அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோர் கையெழுத்திட்டனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றுள்ள குழுவின் சார்பில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் எம்.கே.டி.எஸ்.குணவர்தன ஆகியோர் கையொப்பமிட்டனர்.

இங்கு உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க – கடந்த ஜனவரி 8ஆம் திகதி தொடங்கிய மக்கள் புரட்சியின் மூலம், முன்னர் பறிக்கப்பட்டிருந்த பல உரிமைகள் மக்களிடம் மீண்டும் திருப்பிக் கொடுக்கப்பட்டன. மஹிந்த ஆட்சிக் காலத்தில் சீர்குலைக்கப்பட்ட மக்களின் சுதந்திரம், நாட்டின் சட்டம் – ஒழுங்கு ஆகியவை மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நல்லாட்சியை சீர்குலைக்கக்கூடிய பெரும் அச்சுறுத்தல் ஒன்று இப்போது உருவாகியுள்ளதாகவும், அதனை முறியடிப்பதற்காகவே பல அணிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கூறியுள்ளார்.

SHARE