ஹம்பாந்தோட்டையில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் மூவர் போட்டி

332

 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொது தேர்தலுக்காக போட்டியிடுவதற்கு ராஜபக்ச குடும்பத்தில் மூன்று பேர் இணைந்துள்ளனர்.

சமல் ராஜபக்ச, நிரூபமா ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் அவ் வேட்பாளர்களாகும்.

ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பிரணான்டோவும் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

மாகாண சபை உறுப்பினர் அஜித் ராஜபக்ச இம்முறை பொது தேர்தலில் போட்டியிடவுள்ளார். எனினும் அவர் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது.

 

SHARE