பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தனுஷ்க குணதிலக்க தொடர்பில் விசாரணை நடத்த மூவரடங்கிய விசாரணைக் குழுவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நியமித்துள்ளது.
இதன்படி, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சிசிர ரத்நாயக்க, சட்டத்தரணி நிரோஷன பெரேரா மற்றும் சட்டத்தரணி அசேல ரேகவ ஆகியோரை கொண்ட மூவரடங்கிய குழு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.